/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : நவ 09, 2025 04:03 AM
கரூர்: கரூர் அருகே, தேசிய இணைப்பு சாலை, குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இணையும், கிராம சாலை பகுதி-களில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், வாகனங்களின் வேகத்தை குறைக்கவும் ஒளிரும் விளக்குகள், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இணைப்பு சாலை பகுதியை, பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் இணைப்பு சாலை, பல மாதங்களாக குண்டும், குழி-யுமாக உள்ளது. அதை சீரமைக்காமல், நெடுஞ்சாலை துறை அதி-காரிகள் அலட்சியமாக உள்ளனர்.இதனால், அந்த பகுதியில் அடிக்கடி இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டு, பலர் காயமடைந்துள்ளனர். எனவே, பெரிய ஆண்டாங்-கோவில் அக்ரஹாரம் இணைப்பு சாலை பகுதியில், புதிதாக தார்ச்-சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்-பார்க்கின்றனர்.

