/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண் தொழிலாளி கொலை; கணவருக்கு வலை வீச்சு
/
பெண் தொழிலாளி கொலை; கணவருக்கு வலை வீச்சு
ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, வடமாநில பெண் கூலித் தொழிலாளியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.புகளூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கொங்கு நகரில், முரு-கையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார்.
இவரது பால் பண்ணையில், பீகார் மாநிலம் சம்பரன் தரம்பூர் கிழக்கு கவண்ட-ராவை சேர்ந்த புக்கர் மஜி, 46, அவரது மனைவி சன்மதிதேவி, 28 மற்றும் சன்மதி தேவியின் தம்பி கிருஷ்ண மஜி ஆகியோர் கடந்த, 1ல் வேலைக்கு சேர்ந்துள்ளனர். பால் பண்ணை அருகில் உள்ள, தகர கொட்டகையில் இவர்கள் தங்கியிருந்தனர். புக்கர் மஜிக் என்பவருக்கும், அவரது ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இரவில் நீண்ட நேரம் இரு-வரும், வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததால் சன்மதி தேவியின் சகோதரர் கிருஷ்ணமஜி அங்கிருந்து வெளியே சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை, கிருஷ்ண மஜி வந்-துபார்த்தபோது சன்மதிதேவி தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சன்மதிதேவியை தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பிய அவரது கணவர் புக்கர்மஜியை போலீசார் தேடி வருகின்றனர்.