sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

/

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்


ADDED : செப் 20, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 20, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் கோட்டையில் பிரசித்திபெற்ற நாமிகிரி தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. நாமகிரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு நவராத்திரி விழா, வரும், 22ல் துவங்கி, அக்., 2 வரை, 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, 8:00 மணிக்கு, அரங்கநாயகி தாயார் பேட்டை திருவீதி உலாவும், காலை, 9:00 மணிக்கு, நாமகிரித்தாயார் கோட்டை திருவீதி உலாவும் நடக்கிறது.

இரவு, 7:00 மணிக்கு, நரசிம்ம சுவாமி, ஒவ்வொரு அவதாரத்தில், நாமகிரித்தாயார் சன்னதியில் எழுந்தருளி, மகா தீபாராதனையும், கொலுமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும், மாலை, 6:00 மணிக்கு, லட்சுமிநாராயணர் சன்னதி முன் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழுத்தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், ராம சீனிவாசன், டாக்டர் மல்லிகா, ரமேஷ்பாபு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us