/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆபத்தான நிலையில் மேல்நிலை தொட்டி; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
ஆபத்தான நிலையில் மேல்நிலை தொட்டி; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஆபத்தான நிலையில் மேல்நிலை தொட்டி; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஆபத்தான நிலையில் மேல்நிலை தொட்டி; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மே 09, 2024 06:28 AM
கரூர் : மூலக்காட்டானுாரில், இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் மூலக்காட்டானுார் பகுதிக்குட்பட்ட போக்குவரத்து நகர், அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்பு வாசிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, 20 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்தி கிராமம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.இதையடுத்து, கட்டளை காவிரி ஆற்றில் இருந்து பெரிய குழாய் மூலம் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பி, குழாய் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தொட்டி கட்டி பல ஆண்டுகளானதால் பழுதடைந்தது. இப்பகுதியில் குடியிருப்புகளும் அதிகம் வந்ததால், இந்த பகுதி யில் வேறொரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனால் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. அதில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில், எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. கரூர் - திருச்சி சாலை வழியாக அச்சத்துடன் மக்கள் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.