ADDED : டிச 16, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: பக்தர்களை தாங்கி நிற்கும் படிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகை-யிலும், உலக ஜீவராசிகள் நன்மை பெற வேண்டியும், நேற்று கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை விழா நடந்தது.
முன்னதாக, கரூர் சஷ்டி குழுவினர் வேல், காவடிகள், பால்குடம் எடுத்து கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக வெங்கமேடு, வாங்கப்பா-ளையம் வழியாக வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்திற்கு வந்தனர். பின், திருப்புகழ், தேவார திரு-வாசக முழக்கத்துடன் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள, 30 படிகளுக்கும் தேங்காய், பழம், பூக்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்ன-தானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

