/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
/
இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
ADDED : செப் 18, 2025 01:29 AM
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி ஊருக்குள் வந்து செல்லாமல், பைபாஸில் செல்லும் பஸ்கள் பயணிகளை இரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விடுவதால் பீதி அடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் இருந்து வணிகர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் தினசரி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். இரவு 10:00 மணி வரை அரவக்குறிச்சிக்கு கரூரிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. 10:00 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை செல்லும் பஸ்களில் ஏறி, அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி பயணிகள் இறங்கிக் கொள்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரவக்குறிச்சி நகருக்குள் செல்ல 3 கி.மீ., தொலைவு உள்ளது. இந்த சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால், இரவில் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கும் பயணிகள் பீதியுடன் செல்கின்றனர். எனவே, நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள் அரவக்குறிச்சி வந்து செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.