/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலையால் சிரமப்படும் மக்கள்
/
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலையால் சிரமப்படும் மக்கள்
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலையால் சிரமப்படும் மக்கள்
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலையால் சிரமப்படும் மக்கள்
ADDED : அக் 04, 2025 01:20 AM
கரூர், கரூர் அருகே, சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், ஏமூர் பஞ்சாயத்து காலனி குடியிருப்பு பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏராளமானோர் வசிக்கின்றனர். மேலும், பொது மக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட, பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் ஏமூர்புதுார் குடியிருப்பு காலனி சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, ஏமூர்புதுார் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.