/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்
/
சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்
சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்
சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கடையை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஆக 13, 2025 06:25 AM
கரூர்: கரூரில், சலுகை விலையில் சிக்கன் பிரியாணி கேட்டு, பொது-மக்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், மனோகரா கார்னரில், பிரபல பிரியாணி கடை செயல்படு-கிறது. அதில், நிறுவனர் நாளையொட்டி நேற்று காலை, 6:00 மணி முதல் இன்று அதிகாலை, 12:00 மணி வரை சிக்கன் பிரி-யாணி ஒரு பிளேட், 149 ரூபாய்க்கு சலுகை விலையில் வழங்கப்-படும் என, கடந்த, இரண்டு நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்-டது. இதையடுத்து, பொதுமக்கள் மொபைல் போன் மூலம் சலுகை விலை பிரியாணிக்கு ஆர்டர் செய்தனர். அவர்களுக்கு, நேற்று மதியம் வரை பிரியாணி வழங்கப்பட்டது. இதையறிந்த, பொதுமக்கள் நேற்று இரவு, 7:00 மணிக்கு பிரியாணி கடையில் குவிந்தனர். ஆனால், கடையில் பிரியாணி ஸ்டாக் இல்லாததால், கடை மூடப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் பிரியாணி கடையை முற்றுகையிட்டு, கடை ஊழியர்களிடம் வாக்-குவாதத்தில் ஈடுபட்டனர். கரூர் டவுன் போலீசார் பிரியாணி வாங்க சென்ற பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்-தனர். இதனால், கரூர் மனோகரா கார்னர் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.