sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு

/

குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு

குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு

குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் குடியிருப்போர் நலச்சங்கம் மனு


ADDED : மார் 05, 2024 12:22 PM

Google News

ADDED : மார் 05, 2024 12:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: குடிநீர் உள்பட அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம் என, புலியூர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டம், புலியூர் அருகில் பி.வெள்ளாளப்பட்டியில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்பில், 288 வீடுகள் உள்ளன. இங்கு, அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். மூன்று ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால், தண்ணீர் கிடைக்கவில்லை.

குடிநீர் இல்லாமல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பணிக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும் குடிநீருக்கு பல்வேறு இடங்களுக்கு அலையும் நிலை உள்ளது. இப்பகுதியில் பஸ் வசதி இல்லாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். எங்கள் பிரச்னைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us