/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமி திருமணம் வாலிபர் மீது போக்சோ
/
சிறுமி திருமணம் வாலிபர் மீது போக்சோ
ADDED : மே 02, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு சூளை ஈ.பி.பி. நகர் மோகன் மகன் பிரேம் குமார், 21; தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
சில நாட்களுக்கு பின் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.