/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை
/
நிறுத்திய பைக் திருட்டு போலீசார் விசாரணை
ADDED : நவ 24, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த வீரராக்கியம் பஞ்., சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார், 35; இவருக்கு சொந்த-மான, 'யமஹா' பைக்கை, கடந்த, 13ல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, வீரராக்கியம் பிரிவு ரோடு அருகே நிறுத்திவிட்டு, வேறொரு வேலையாக கரூருக்கு சென்றார்.
பின், இரவு வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் பைக் கிடைக்கவில்லை. பிரவீன்-குமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

