/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு முதுகலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
/
தொடர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு முதுகலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
தொடர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு முதுகலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
தொடர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு முதுகலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
ADDED : டிச 31, 2025 06:10 AM
கரூர்: 'வரும், 6 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறோம்' என, அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலர் மகேந்திரன் தெரி-வித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ-கத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்-வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட எம்.பில்., ஊக்க ஊதி-யத்தை உடனே வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறை-வேற்ற வேண்டும். மேலும், சம வேலைக்கு சம ஊதியம் வலியுறுத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பணி நிரந்தரம் வேண்டி போராடும் துாய்மை பணியாளர்கள், செவிலியர்-களுக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறோம். கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஜனநாயக அடிப்படையில் போராடக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி-யர்களை அராஜகம் முறையில் அடக்க நினைப்-பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரும், 6 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில், எங்கள் சங்கம் கலந்துகொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

