sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

/

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஆக 06, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 18 பேருக்கு, 6.20 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார்.

கரூர் ராயனுாரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டுறவு துறையின் சார்பில், ஐந்து விவசாயிகளுக்கு, கால்நடை பராமரிப்பு கடனுதவி, எரிசக்தி துறை சார்பில், இருவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணை, வருவாய் துறை சார்பில், ஆறு பேருக்கு இருப்பிட சான்று, ஜாதி சான்று, மற்றும் வருமான சான்று உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும் மாநகராட்சி சார்பில், ஐந்து பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. மொத்தம், 18 பேருக்கு, 6.20 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.முகாமில் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

இன்று

கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி வட்டாரத்திற்கு காருடையாம்பாளையம் வி.பி.எஸ்.சி., கட்டடத்திலும், ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்.,க்கு, பெரியவடுகபட்டி சமுதாயக்கூடத்திலும், காதப்பறை பஞ்.,க்கு, அங்குள்ள ராசிமுருகன் மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில், தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் மனுக்களாக அளிக்கலாம்.

இத்தகவலை கலெக்டர் தங்க

வேல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us