sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

/

க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஜன 13, 2025 03:32 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.பரமத்தி: 'க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, பஞ்., யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகு-தியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவ-லகம், அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட, 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், அப்பகுதியை சுற்றி-யுள்ள முன்னுார், குப்பம், பவுத்திரம், நெடுங்கூர், காருடையாம்-பாளையம், நடந்தை, ஆரியூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் வேலைக்காகவும், வெளியூர் செல்-லவும், வெளியூர்களிலிருந்து பரமத்திக்கு தினசரி பஸ்சில் பயணம் செய்கின்றனர். அப்போது, நுாற்றுக்கணக்கான மக்கள் ரோட்டோரத்தில் பல மணி நேரம் காத்துகிடப்பதால் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பஸ் ஸ்டாப்பில் நிற்-பதால் பல்வேறு பிரச்னைக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளின் நலன்கருதி, க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us