/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
முட்புதராக மாறிய தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : டிச 11, 2025 06:27 AM

கரூர்: செட்டிபாளையம் தடுப்பணை பூங்கா முழுவதும், முட்புதர்க-ளாக மாறி விட்டதால், சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் அருகே செட்டிபாளையத்தில், அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையின் மூலம் அப்பிபாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வச-தியும் கிடைத்தது. தடுப்பணையில் நீர்வீழ்ச்சி
போல் தண்ணீர் கொட்டுவதால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்-றுலா பயணிகள், பார்வையிட வருகை
தருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன், அப்பிபாளையம் பஞ்சாயத்து சார்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் ஊஞ்சல், சிங்கம், புலி, மான் உள்ளிட்ட வன விலங்கு
களின் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
தடுப்பணையை பார்வையிட்ட பின், பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், தொடர்ந்து பூங்கா சரி-யாக பராமரிப்பு இல்லாததால் முட்புதர்களாக மாறி விட்டது. அப்-பிபாளையத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தடுப்பணைக்கு வருகின்றனர்.
பொது மக்களின் வருகை தற்போது
அதிகரித்துள்ளதால், பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.

