/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயணிகள் நிழற்கூடம் சேதம் அச்சத்தில் பொதுமக்கள்
/
பயணிகள் நிழற்கூடம் சேதம் அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : டிச 11, 2025 06:24 AM
கரூர்: கரூர் அருகே, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் பஞ்சாயத்து யூனியன், நெரூர் தெற்கு பஞ்., அரங்கநாதன் பேட்டையில் கடந்த, 2013-14ல் பயணிகள் நிழற்கூடம் கட்டப்-பட்டது. அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நி-லையில், நிழற்கூடத்தின் சுவர்கள் சேதமடைந்துள்ளது. பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லை. அதை முழுமையாக, பஞ்., நிர்-வாகத்தினர் சீரமைக்காமல் விட்டுள்ளனர். தற்போது, மழை பெய்து வரும் நிலையில், நிழற்கூடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அரங்கநாதன் பேட்டையில் உள்ள, நிழற்கூ-டத்தை உடனடியாக சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

