/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் மக்கள் குறைதீர் முகாம்
/
குளித்தலையில் மக்கள் குறைதீர் முகாம்
ADDED : ஆக 10, 2025 01:26 AM
குளித்தலை, குளித்தலை தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும்.
அதன்படி நேற்று நடைபெற்ற முகாமிற்கு, டி.எஸ்.ஓ., வைரபெருமாள் தலைமை வகித்தார். அவர், பொது மக்களிடமிருந்து ரேஷன் கார்டு சம்பந்தமான கோரிக்கை மனுக்களை பெற்றார். அலுவலக இளநிலை உதவியாளர்கள் விக்னேஸ்வரன், யுவராஜ், அலுவலக உதவியாளர் அதியமான், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்துகொண்டு, அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம் என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டன.