/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 31, 2024 07:20 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.
இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன், பட்டா மாறுதல், ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 369 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள, தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் நிலமற்ற இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் நன்னிலம் மகளிர் உடைமை திட்டத்தின் கீழ், 7 பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீடு திட்டத்தில், மானியத்துடன், 73.50 லட்சம் ரூபாய் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட நில உரிமை பத்திரங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சக்தி பாலகங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.