sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

/

கரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

கரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

கரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்


ADDED : ஜூன் 17, 2025 02:24 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் பழுது காரணமாக, வினியோகம் இல்லை என கூறி, பொதுமக்கள் நேற்று குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன், ஜெகதாபி பஞ்சாயத்து பொரணி தெற்கு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக, அந்த பகுதியில் இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறி, நேற்று காலை பொதுமக்கள் காலி குடங்களுடன், பொரணி தெற்கு சாலையில், அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மின் மோட்டார் பழுது சரி செய்யப்பட்டு, குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறை பிடிக்கபட்ட அரசு பஸ்சை பொதுமக்கள் விடுவித்து, மறியலை கைவிட்டனர். இதனால், பொரணி தெற்கு பகுதியில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us