sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி

/

நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி

நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி

நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி


ADDED : டிச 27, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் பகுதியில், நெல் சாகுபடி வயல்களில் எலி தொல்லைகளை தடுக்கும் வகையில், கிடுக்கி வைக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம், மேட்டுமகாதானபுரம், நந்தன்கோட்டை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, ஆந்திரா பொன்னி ரக நெல் சாகுபடி நடந்து வருகிறது. வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல் கண்டுள்ளது. இதனால் வயல்களில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. விளைச்சல் அடைந்த கதிர்களை எலிகள் நறுக்கி விடுகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை தடுக்கும் வகையில், விவசாயி கள் இயற்கை முறையில் எலி கிடுக்கி வைத்து, அதன் மூலம் எலிகளை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.எலி கிடுக்கி வைக்கும் போது, எலிகள் வயல்களின் உள்ளே செல்லாமல் வரப்பு கரைகளில் மட்டும் சுற்றி விட்டு வெளியே செல்கிறது. இதன் மூலம் நெல் வயல்கள் பாதுகாக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us