/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் வரும் 19ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
/
கரூர் மாவட்டத்தில் வரும் 19ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் வரும் 19ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் வரும் 19ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 16, 2024 01:04 AM
கரூர், அக். 16-
வரும்,19ல் ரேஷன் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் வரும், 19 காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர்,
குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம்
நடக்கிறது. பொது வினியோகத் திட்டத்தில் ரேஷன் கார்டில்
பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை
தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.