ADDED : ஜூலை 26, 2026 06:15 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:பிச்சம்பட்டி வழியாக செல்லும், கட்டளை மேட்டு வாய்க்காலில் மரம் சாய்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, பிச்சம்பட்டி வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. வாய்க்காலில் தண்ணீர்
திறக்கும் போது, பாசன நீர் விவசாய நிலங்களுக்கு பிரித்து
அனுப்பப்படுகிறது. தற்போது பிச்சம்பட்டி வாய்க்கால் பாலம் அருகே,
பழமையான மரம் ஒன்று வாய்க்கால் கரையில் இருந்து கீழே சரிந்து
விழுந்துள்ளது. மரம் சாய்வு காரணமாக, வாய்க்காலில் தண்ணீர்
செல்லும் போது பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வாய்க்கால் பாலம்
அருகில் விழுந்துள்ள மரத்தை அகற்ற நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
