sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரி கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

/

காவிரி கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

காவிரி கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

காவிரி கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை


ADDED : நவ 12, 2025 01:32 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே காவிரியாற்றின், கிளை வாய்க்காலில் முளைத்துள்ள, ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து, கரூர் மாவட்ட சம்பா சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், காவிரி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடி பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

அடுத்த கட்ட உரம் இடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணி நடப்பதால், மேட்டூர் அணையில் இருந்து, குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரூர் அருகே புகழூர் வழியாக செல்லும், காவிரியாற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளன.

மேலும், ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைபட்டுள்ளது. எனவே, காவிரியாற்றின் பாசன கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை மற்றும் ஆகாயதாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயி

கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us