sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்று கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை

/

அமராவதி ஆற்று கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை

அமராவதி ஆற்று கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை

அமராவதி ஆற்று கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை


ADDED : நவ 26, 2024 01:05 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி ஆற்று கிளை வாய்க்கால்

பாலத்தை சீரமைக்க கோரிக்கை

கரூர், நவ. 26-

கரூர் மற்றும் பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டது. விவசாயிகள் அந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த, 2013ல் கரூர்-பசுபதிபாளையம் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடந்தது. அப்போது, கிளை வாய்க்கால் மேல்பகுதியில் அமைந்த, சிறுபாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தினர்.

சிறுபாலத்தின் வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகிறது. சிறுபாலம் மற்றும் சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலம் இடிந்து வாய்க்காலில் விழுந்தால், கழிவுநீர் அமராவதி ஆற்றில் நேரிடையாக சேரும் நிலை ஏற்படும். எனவே அந்த சிறுபாலம் மற்றும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us