sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

/

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 28, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதியில், மருத்துவமனைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கந்தம்பாளையம் பகுதியில், சாலையையொட்டி வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை டிரைவர்கள், பலமணி நேரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். மேலும், கந்தம்பாளையம் பகுதி அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடுடன் டிராக்டர்களும் சென்றபடி உள்ளது. இதனால், அந்த பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, கந்தம்பாளையம் பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், மாற்று இடத்தை தேர்வு செய்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us