/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை முதல் மாநில மாநாட்டின் முடிவின்படி, சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தப்பட்சம் ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் மாசிலாமணி, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மாலதி, அங்கன் வாடி ஊழியர் சங்க செயலாளர் சாந்தி உள்பட, பலர் பங்கேற்றனர்.