ADDED : ஜன 10, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 77; புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பணி முடிந்த பிறகு, பழனியப்பன் சைக்கிளில் வேலாயுதம்பாளையம் அருகே, தளவாப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கேசவன், 25; என்பவர் ஓட்டி சென்ற டூவீலர், சைக்கிள் மீது மோதியது. அதில், கீழே விழுந்த பழனியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

