/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
/
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
ADDED : பிப் 09, 2025 07:00 AM
கரூர்: லாலாப்பேட்டை அருகே, கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் நாகராஜ், 29, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 6ல் இரவு ரமேஷ் என்பவரது வீட்டு முன், அமர்ந்து பேசிக் கொண்டி-ருந்தார். அப்போது அங்கு சென்ற சங்கர், 34, என்பவர் முன் விரோதம் காரணமாக, நாகராஜை கத்தியால் குத்தி விட்டு, தப்பி ஓடினார்.
இதுகுறித்து, நாகராஜ் கொடுத்த புகார்படி, லாலாப்-பேட்டை போலீசார், பிள்ளாப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த, சங்கரை கைது செய்ய முயன்றனர். அப்போது, சங்கர் தப்பி ஓட முயன்றதால், கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.