sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் இரட்டை வாய்க்கால் பகுதி மக்கள் பீதி

/

வீட்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் இரட்டை வாய்க்கால் பகுதி மக்கள் பீதி

வீட்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் இரட்டை வாய்க்கால் பகுதி மக்கள் பீதி

வீட்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் இரட்டை வாய்க்கால் பகுதி மக்கள் பீதி


ADDED : அக் 03, 2024 07:27 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: இரட்டை வாய்க்கால் கரையோர குடியிருப்பு வீடுகளில், பாம்புகள் படையெடுப்பதால், பொது-மக்கள் பீதியுடன் உள்ளனர்.

கரூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள, அமராவதி ஆற்றிலிருந்து இரட்டை வாய்க்கால் பிரிகிறது. இது கரூர் நகருக்குள், 12 கி.மீ., துாரம் பயணம் மேற்கொண்டு பாலம்மாள்புரத்தில் ஆற்றில் கலக்கிறது. வாய்க்காலில் செடி, கொடிகள் படர்ந்தும், பிளாஸ்டிக் குப்பை, ஆகா-யத்தாமரைகள் நிறைந்து கழிவுநீர் வாய்க்களாக மாறி விட்டது. நீண்ட நாட்களாக துார் வாரப்ப-டாமல் உள்ளதால், கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்-டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இரட்டை வாய்க்கால்களில் ஹோட்டல் மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகள் பெருமளவில் கொட்டப்பட்டு வருகிறது. நாய்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதுமட்டுமின்றி நீலி-மேடு, மக்கள் பாதை பகுதிகளில் பாம்புகள் நட-மாட்டம் உள்ளன. இவை கரையோரம் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகள் தவிக்கின்றனர்.

செடிகள், கொடிகள் மண்டி கிடப்பதால் பாம்புகள் மட்டு-மின்றி, தேள், பூரான் போன்றவையும் வந்து விடுகிறது. இதுதவிர கொசுத்தொல்லையை பற்றி கேட்கவே வேண்டாம்.வாய்க்காலை குப்பை கொட்டும் இடமாக, மாநக-ராட்சி பணியாளர்கள் மாற்றி விட்டனர். பெரும்-பாலான இடங்களில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் என குப்பை கிடக்கிறது. கரையோரம் வசிப்ப-வர்கள் துாங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. கொசுக்கள் வாயிலாக மர்ம காய்ச்சலால் தவிக்-கின்றனர். உடனடியாக வாய்க்காலை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us