sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் புள்ளி மான் மீட்பு

/

கரூரில் புள்ளி மான் மீட்பு

கரூரில் புள்ளி மான் மீட்பு

கரூரில் புள்ளி மான் மீட்பு


ADDED : மே 08, 2024 05:27 AM

Google News

ADDED : மே 08, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூரில் சுற்றித்திரிந்த புள்ளி மானை, வனத்துறையினர் நேற்று மீட்டனர்.கரூர் அருகே, அண்ணா நகர் பகுதியில் நேற்று அதிகாலை, பெண் புள்ளி மான் ஒன்று சுற்றி திரிவதாகவும், அதை நாய்கள் துரத்துவதாகவும், அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு போலீசார், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அண்ணா நகர் பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், புள்ளி மானை தேடி அலைந்தனர். இறுதியாக, தனியாருக்கு சொந்தமான ஜவுளி குடோனில் தஞ்சம் புகுந்திருந்த, புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர்.அப்போது, புள்ளி மானுக்கு உடலில் சில இடங்களில் காயம் இருந்தது. இதனால், புள்ளி மான் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காட்டுப் பகுதியில் இருந்து, தண்ணீரை தேடி அமராவதி ஆற்றின் பகுதி வழியாக, புள்ளி மான் கரூர் நகருக்குள் நுழைந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us