sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆசிரியர் தகுதி தேர்வு: 530 பேர் 'ஆப்சென்ட்'

/

ஆசிரியர் தகுதி தேர்வு: 530 பேர் 'ஆப்சென்ட்'

ஆசிரியர் தகுதி தேர்வு: 530 பேர் 'ஆப்சென்ட்'

ஆசிரியர் தகுதி தேர்வு: 530 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 17, 2025 03:45 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், 530 பேர் எழுத வரவில்லை.

பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்-பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு, கடந்த ஆக., மாதம் வெளியிடப்பட்டது. செப்., 10 வரை விண்ணப்-பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஐந்து மையங்களில் நடந்த தேர்வில் விண்ணப்பித்தவர்-களில், 1,254 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். ஆனால், 1,106 பேர் தேர்வு எழுதினர். 148 பேர் தேர்வு எழுத வர-வில்லை.தொடர்ந்து, இரண்டாம் தாள் தேர்வு, நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில், கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட, 19 மையங்களில், 5,228 தேர்வர்கள் எழுத தகுதி பெற்-றனர். அதில், 4,698 பேர் தேர்வு எழுத வந்தனர். 530 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை, 9:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அதற்கு மேல் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தின் வெளியே, நுழைவு சீட்டு உள்ளவர்கள் மட்டுமே சோதனைக்கு பின், உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் மற்றும் அவசர தேவைக்கான மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்-கவும், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us