ADDED : அக் 31, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, கோவில் நிலம் நேற்று மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து, வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்.,க்குட்பட்ட ராகவேந்திரா நகர் அருகில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலுக்கு சொந்தமான, 1 ஏக்கர் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். பிறகு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான காலி நிலம் என, போர்டு வைக்கப்பட்டது. கரூர் டவுன்
டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

