/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துப்பாளையம் அணையில் சரிந்த தடுப்பு சுவர் விவசாயிகள் கடும் அதிர்ச்சி
/
ஆத்துப்பாளையம் அணையில் சரிந்த தடுப்பு சுவர் விவசாயிகள் கடும் அதிர்ச்சி
ஆத்துப்பாளையம் அணையில் சரிந்த தடுப்பு சுவர் விவசாயிகள் கடும் அதிர்ச்சி
ஆத்துப்பாளையம் அணையில் சரிந்த தடுப்பு சுவர் விவசாயிகள் கடும் அதிர்ச்சி
ADDED : நவ 19, 2024 01:29 AM
ஆத்துப்பாளையம் அணையில் சரிந்த தடுப்பு சுவர்
விவசாயிகள் கடும் அதிர்ச்சி
கரூர், நவ. 19-
க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணையின் தடுப்பு சுவர் சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார் வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அணை கட்டப்பட்டது. நொய்யல் ஆறு மற்றும் கீழ் பவானி பாசன வாய்க்கால் கசிவு நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது.
திருப்பூர் சாயக்கழிவு பிரச்சனையால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த, 2019 ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.90 அடியை தண்ணீர் எட்டியது. தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை கார ணமாக, ஆத்துப்பாளையம் அணை கடந்த, 16 முதல் நிரம்பியுள்ளது.
இதனால், நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயி கள் உள்ளனர். இந்நிலையில், அணையில் தடுப்பு சுவர்கள், சில இடங்களில் சரிந்துள்ளது. இதனால், நொய்யல் வாய்க்கால் பாசன விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, ஆத்துப்பாளையம் அணையில் சரிந் துள்ள தடுப்பு சுவர்களை, சீரமைக்க நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அணை நிலவரம்
ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து, நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தண்ணீர் வரத்து தொடர்வதால், பாசன தேவைக்காக நொய்யல் வாய்க்காலில், கூடுதல் தண்ணீர் திறக் கப்படும் என, விவசாயிகள் பெரிதும் எதிர் பார்க்கின்றனர்.