/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்றாம் நாளாக வருவாய் அலுவலர் சங்கம் போராட்டம்
/
மூன்றாம் நாளாக வருவாய் அலுவலர் சங்கம் போராட்டம்
ADDED : மார் 01, 2024 02:34 AM
கரூர்:துணை
தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை
வெளியிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை
அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை
அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க
வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர். 250க்கும்
மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றதால், கரூர் கலெக்டர் அலுவலகம், தாலுகா
அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

