/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவிக்கு மிரட்டல்: கணவன் மீது வழக்கு
/
மனைவிக்கு மிரட்டல்: கணவன் மீது வழக்கு
ADDED : நவ 17, 2025 03:42 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த பாலவிடுதி பஞ்., நாச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 30; அதே ஊரை சேர்ந்த யோகராஜ், 38, என்பவரை, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்-ளனர். இதில், யோகராஜ், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்தி-ருந்ததால், மூன்றாண்டுகளுக்கு முன் மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்றார். மனைவி விஜயலட்சுமி, இரண்டு குழந்தைக-ளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த, 14ல், மாமியார் வீட்டிற்கு சென்ற யோகராஜ், மனைவி விஜயலட்சுமியை தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகு-றித்து விஜயலட்சுமி அளித்த புகார்படி, பாலவிடுதி போலீசார் யோகராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

