/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
/
உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
ADDED : நவ 25, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், :காவலர்கள் நண்பர்கள் உதவும் கரங்கள் சார்பில், உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, கரூர் ஜவஹர் பஜாரில் தனியார் ஓட்டலில் நடந்தது.
அதில், சமீபத்தில் உயிரிழந்த காவலர் அருள் குமாரின் குடும்பத்துக்கு, 28 லட்சத்து, 12 ஆயிரத்து, 500 ரூபாயை, 2003ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள், 71 பேர் தரப்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், காவலர் அருள் குமாரின் மனைவி கிருத்திகா, அவரது குடும்பத்தினர் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

