/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார்கள் நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல்
/
கார்கள் நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 23, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர்-திருச்சி சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தை செயல்படுகிறது.
அங்கு 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உழவர் சந்தை அருகே திருச்சி சாலையில் கார்கள், வேன்களை பல மணி நேரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். அந்த வழியாக திருச்சிக்கு செல்லும் பஸ்கள் நீண்ட வரிசையில் நின்று விடுகிறது. உழவர் சந்தை பகுதியில் கார்கள், வேன்கள் நிறுத்த, போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும்.

