sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இருசக்கர விற்பனை நிறுவனத்தால் மனஉளைச்சல் பெண்ணுக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க உத்தரவு

/

இருசக்கர விற்பனை நிறுவனத்தால் மனஉளைச்சல் பெண்ணுக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க உத்தரவு

இருசக்கர விற்பனை நிறுவனத்தால் மனஉளைச்சல் பெண்ணுக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க உத்தரவு

இருசக்கர விற்பனை நிறுவனத்தால் மனஉளைச்சல் பெண்ணுக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : டிச 25, 2024 02:27 AM

Google News

ADDED : டிச 25, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 25-

கரூரில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கரவாகனத்துக்கு, முறையாக சர்வீஸ் செய்து தராததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகள் சாந்தி,30. இவர் கடந்த, 2022 ல் அக்., மாதம் கரூரில் உள்ள தனியார் டூவீலர் விற்பனை நிறுவனத்தில், 78 ஆயிரத்து, 130 ரூபாய் செலுத்தி, புதிதாக டி.வி.எஸ்., ஸ்கூட்டி இரு சக்கர வாகனத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.

மேற்படி நிறுவனத்தில் பல முறை சர்வீஸ் செய்த பிறகும், புதிதாக வாங்கப்பட்ட இரு சக்கரவாகனம் சரியாக இயங்கவில்லை.

இதனால், ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 78 ஆயிரத்து, 130 ரூபாயை, 12 சதவீத வட்டியுடன் டூவீலர் நிறுவனம், தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சாந்தி, கடந்த, 5 ல் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நுகர்வோர் ஆணைய தலைவர் பாரி, உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர், இருசக்கர வாகனத்தை சரிவர சர்வீஸ் செய்து கொடுக்காததால், சாந்திக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, கரூர் தனியார் இருசக்கர விற்பனை நிறுவனம், 55 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, நேற்று உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us