/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடையாளம் தெரியாத வாகனம்மோதி மூதாட்டி படுகாயம்
/
அடையாளம் தெரியாத வாகனம்மோதி மூதாட்டி படுகாயம்
ADDED : ஜன 07, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாளம் தெரியாத வாகனம்மோதி மூதாட்டி படுகாயம்
அரவக்குறிச்சி அரவக்குறிச்சி அருகே கருங்கல் புளியம்பட்டியை சேர்ந்தவர் சென்னியப்பன் மனைவி குப்பாத்தாள், 85. இவர் சம்பவத்தன்று இரவு, பெரிய புளியம்பட்டி அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் குப்பாத்தாள் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.