/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை
/
பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை
பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை
பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை விசாகா கமிட்டி விசாரணை
ADDED : செப் 23, 2024 04:33 AM
கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பெண் பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக, விசாகா கமிட்டி விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர், 25 வயது பெண் பயிற்சி டாக்டர். இவர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பயிற்-சியில் ஈடுபட்டு வருகிறார். அதே கல்லுாரியில் பணிபுரியும் திண்-டுக்கல்லை சேர்ந்த, 45 வயது அறுவை சிகிச்சை உதவி மருத்-துவர், சில நாட்களுக்கு முன், பாலியல் தொல்லை கொடுத்ததாக, பயிற்சி டாக்டர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.இதையடுத்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, விசாகா கமிட்டியில் உள்ள, 2 மருத்துவர்கள், 3 அதிகாரிகள் அடங்கிய, 5 பேர் கொண்ட குழுவினர், விசாரணையை, நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் ராஜா (பொ) கூறுகையில், ''அறுவை சிகிச்சை உதவி மருத்-துவர் மீது, பெண் பயிற்சி மருத்துவர் கொடுத்த பாலியல் புகாரை, விசாகா கமிட்டியினர் விசாரித்து வருகின்றனர். விசா-ரணை அறிக்கை வந்த பிறகே, முழுமையான தகவல்களை
கூற முடியும்,'' என்றார்.
கடந்த மே மாதமும் இதே புகார்
கடந்த மே மாதம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் பணியாற்றிய, 25 வயதுடைய பெண் பயிற்சி டாக்டர் ஒருவர், மதுரையை சேர்ந்த ஆண் பயிற்சி டாக்டர் ஒருவர், திரு-மணம் செய்து கொள்வதாக கூறி, தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார். இதுகுறித்து, கரூர் மகளிர் போலீசார், ஆண் பயிற்சி டாக்டர் ராஜேஷ்வரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.