/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் இன்று முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கல்
/
கரூரில் இன்று முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கல்
கரூரில் இன்று முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கல்
கரூரில் இன்று முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கல்
ADDED : நவ 04, 2025 01:14 AM
கரூர், நவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
இது குறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி வரும் பிப்., 7 வரை பல்வேறு கட்டங்களாக நடக்கிறது.
இதில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் இன்று (4ம் தேதி) முதல் வீடு வீடாக வாக்காளர் களுக்கு வழங்கப்படுகிறது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் இரட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட ஒரு படிவத்தினை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள, வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இப்பணி தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலக தொலைபேசி எண் 04320 230170, கரூர் வாக்காளர் பதிவு அலுவலக தொலைபேசி எண் 04324 260745, கிருஷ்ணராயபுரம் வாக்காளர் பதிவு அலுவலக தொலைபேசி எண் 04323 243366, 137, குளித்தலை வாக்காளர் பதிவு அலுவலக தொலைபேசி எண் 04323 222395 மற்றும் கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950 -ஐ தொடர்ப்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

