sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 05, 2024 07:42 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 6,898 கன அடி தண்ணீர் வந்தது.

நேற்று காலை, 8:00 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,122 கன அடியாக அதிக-ரித்தது. அந்த தண்ணீர்

முழுவதும், காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக, நான்கு பாசன

வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி

நிலவரப்படி தண்ணீர் வரத்து, 389 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 88.36

அடியாக இருந்தது. அம-ராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்கால், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு

நேற்று நிறுத்தப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை, 1,281 கன அடி

தண்ணீர் வந்தது. ஆத்துப்பாளையம் அணை: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்-பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி

நிலவரப்படி வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.68

அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us