sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

/

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : ஆக 09, 2025 01:43 AM

Google News

ADDED : ஆக 09, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகரிக்கப்பட்டது.

க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணையில் இருந்து கடந்த, 6ல் நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 88 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு தண்ணீர் திறப்பு, 129 கன அடியாக உயர்த்தப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.78 அடியாக இருந்தது.

* மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 17 ஆயிரத்து, 358 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 15 ஆயிரத்து, 748 கன அடியாக குறைந்தது. அதில் டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக காவிரியாற்றில், 14 ஆயிரத்து, 378 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 600 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us