/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துவங்கியது தென் மேற்கு பருவமழை நிழற்கூடங்கள் சீரமைக்கப்படுமா?
/
துவங்கியது தென் மேற்கு பருவமழை நிழற்கூடங்கள் சீரமைக்கப்படுமா?
துவங்கியது தென் மேற்கு பருவமழை நிழற்கூடங்கள் சீரமைக்கப்படுமா?
துவங்கியது தென் மேற்கு பருவமழை நிழற்கூடங்கள் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 14, 2025 04:20 AM
கரூர்: தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, பழுதடைந்-துள்ள பெரும் பாலான நிழற்கூடங்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் ஜரூ-ராக நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்-லாமல், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு பல்-வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர்.குறிப்பாக, திருச்சி செல்லும் சாலையில் உள்ள சுக்காலியூர், புலியூர், வீரராக்கியம், மணவாசி, மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து மிக அதிக எண்-ணிக்கையில் தொழிலாளர்கள் பஸ் மூலம் கரூர் வந்து செல்கின்-றனர். கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற்கூடங்களின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. பயணிகள் உட்கார அமைக்-கப்பட்ட சீட்கள் கழன்றும், காணாமலும் போயுள்ளன. இதனால், பயணிகள் மழை மற்றும் வெயிலுக்கு நிழற்கூடத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நிழற் கூடம் பழுத-டைந்த இடங்களில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுவர்.
எனவே, பொது மக்களின் நலன் கருதி கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்கூடங்-களை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்-பட்ட, கிராம பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.