ADDED : நவ 22, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தேர்நிலை தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் திலீப்ராஜ், 38; ஆறு ஆண்டுகளுக்கு முன் சங்கீதா, 37, என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு,
ஆறு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், கணவர் திலீப்ராஜ் வேலைக்கு சென்றார். சங்கீதா வீட்டில் தனியாக இருந்த நிலையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னதாராபுரம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

