/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் மணல் மூட்டை கடத்திய தொழிலாளி கைது
/
பைக்கில் மணல் மூட்டை கடத்திய தொழிலாளி கைது
ADDED : ஜூன் 24, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை, மேல மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 43. இவர், நேற்று முன்தினம் மணத்தட்டை வாய்க்கால் பாலம் அருகே, காவிரி ஆற்றில் இருந்து மணல் மூட்டைகளை, தனக்கு சொந்தமான பேஷன் புரோ பிளஸ் பைக்கில் கடத்தி சென்றார்.
அப்போது, ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், பைக்கை மணல் மூட்டையுடன் பறிமுதல் செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.