/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
/
பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஜன 20, 2026 04:58 AM
குளித்தலை: சாலையோர குழிக்குள் பைக்குடன் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
குளித்தலை அடுத்த போத்தராவுத்தன்பட்டி பஞ்., எருமைகாரனுாரை சேர்ந்தவர் கனகராஜ், 33. விவசாய தொழிலாளி.
இவர் கடந்த, 17ம் தேதி இரவு 9:00 மணியளவில் தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், பஞ்சப்பட்டி சென்று பொங்கல் பொருள்களை வாங்கி விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, மாரியம்மன் கோவில் அருகே சாலை ஓரத்தில் இருந்த குழிக்குள், பைக்குடன் விழுந்-ததில் கனகராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனும-தித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி கருப்பாயி, 31, கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.

