/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலை யூனியன் ஆபீசில் இளைஞர் திறன் திருவிழா
/
தோகைமலை யூனியன் ஆபீசில் இளைஞர் திறன் திருவிழா
ADDED : நவ 13, 2024 03:50 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த தோகைமலை யூனியன் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா சார்பில், இளைஞர் திறன்
திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி
சசிகுமார் தலைமை வகித்தார். யூனியன் கமிஷனர் ராஜேந்திரன், மகளிர் உதவி
திட்ட அலுவலர்கள் அன்புராஜா, ராஜேஸ், சிந்து ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.முன்னதாக, தோகைமலை வட்டார இயக்க மேலாளர் சத்யா வரவேற்றார்.
மகளிர் திட்ட இயக்குனர் பாபு, திறன் மேம்பாட்டு பயிற்சியில் தேர்வு
செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில், 18 முதல், 35 வயது
வரை, 10ம் வகுப்பு படித்த பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், எஸ்.சி., -
எஸ்.டி., மற்றும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டது.மேலும், தையல் பயிற்சி, சி.என்.சி., மிஷின் ஆப்ரேட்டர்,
நர்சிங், சில்லரை வணிகம், தகவல் தொழில்நுட்ப சேவை போன்ற
பயிற்சிகளுக்கு, 3 முதல், 6 மாதம் வரை இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது.பயிற்சியின் போது போக்குவரத்து, உணவு,
தங்குமிடம், சீருடை, பாட புத்தகம் மற்றும் காப்பீடு அனைத்தும்
இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு,
வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. 161 பேர் கலந்து கொண்டனர்.
அதில், 136 பேர் பயிற்சிக்கு தேர் செய்யப்பட்டனர்.

