/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்
/
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்
ADDED : ஆக 31, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; பிளஸ் 2 முடித்துள்ளார்; நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டில் இருந்து ஜிம்மிற்கு சென்ற சிறுவன் திரும்பி வரவில்லை.
அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.
ஓசூர் ஜூஜூவாடி ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் திலிப்குமார், 29; டிரைவர். கடந்த, 1 இரவு, 9:10 மணிக்கு, ஜூஜூவாடி தனியார் லே அவுட்டில் உள்ள தன் நண்பர் மெக்கானிக் கடையில் இருந்து வீட்டிற்கு சென்றவர் மாயமானார்.
அவரது தங்கை தீபா, 26, கொடுத்த புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.