/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி டோல்கேட் கட்டணம் உயர்வுமோட்டார் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்
/
கிருஷ்ணகிரி டோல்கேட் கட்டணம் உயர்வுமோட்டார் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்
கிருஷ்ணகிரி டோல்கேட் கட்டணம் உயர்வுமோட்டார் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்
கிருஷ்ணகிரி டோல்கேட் கட்டணம் உயர்வுமோட்டார் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்
ADDED : ஏப் 02, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி டோல்கேட் கட்டணம் உயர்வுமோட்டார் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு தென்னகத்தின் நுழைவாயிலாக உள்ளது. கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக நாள்தோறும், 40,000 வாகனங்கள் இருபுறங்களிலும் கடந்து
செல்கின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையாகவும், அதிக டோல் பீஸ் வசூல் செய்யும் டோல்கேட்டாகவும் உள்ளது. கிருஷ்ணகிரி டோல்கேட் வசூலில், தமிழகத்தில் முதலிடமும், இந்திய அளவில், 8ம் இடமும் பிடித்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கிருஷ்ணகிரி டோல்கேட்டில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை, இரு முறை, மாதம், 50 முறை என வாகனங்களை பொறுத்து டோல்கேட் கட்டணம் குறைந்தபட்சம், 5 ரூபாய் முதல் அதிகபட்சம், 135 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாத கட்டணங்களும் வாகனத்தை பொறுத்து, 165 முதல், 675 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 20 கி.மீ., வந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு பழைய மாத கட்டணம், 340-லிருந்து, 350 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மோட்டார் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கூறுகையில், 'ஏற்கனவே டீசல், பெட்ரோல் உயர்வால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.தற்போது சுங்கக் கட்டணம் உயர்வு, எங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சுங்கக்கட்டணம் உயர்வால், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே, சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்' என்றனர்.